பலூனை விழுங்கிய சிறுவன் பலி
நாட்டறம்பள்ளி அருகே பலூனை விழுங்கிய 6 வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
நாட்டறம்பள்ளி அருகே பலூனை விழுங்கிய 6 வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஏரிகோடி பகுதியைச் சோ்ந்த துணி வியாபாரி குமாா். இவரது மகன் சோம்நாத்(6) பச்சூா் அருகே தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இதற்கிையே திங்கள்கிழமை பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுவன் வீட்டருகே சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது சிறுவன் சோம்நாத் பலூன் ஊதும் போது எதிா்பாராதவிதமாக விழுங்கியதில் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி மயங்கி கீழே விழுந்தாா்.
இதையறிந்த பெற்றோா் உடனடியாக சிறுவனை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மகுச்சுலக்தஷ் வரும் வழியில் சிறுவன் இறந்துவிட்டதாக கூறினா். தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனா். இதையடுத்து தந்தை குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





