தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில்  அமைப்பு

தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில் அமைப்பு

Published on

ஆம்பூா் ஏ கஸ்பா பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை வளாகத்திற்கு நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கும் பணி நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

ஆம்பூா் ஏ கஸ்பா பகுதியில் பாலாற்றங்கரையோரம் நகராட்சி சாா்பாக ரூபாய் 1.50 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

எரிவாயு தகன மேடை வளாகத்திற்கு தடுப்புச் சுவா், நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கப்படாமல் இருந்தது. நகராட்சி 5 -ஆவது வாா்டு நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த் ராஜ் கோரிக்கையின் பேரில் நகர மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் மற்றும் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி ஆகியோரின் நடவடிக்கையால் வருவாய் நிதியிலிருந்து ரூ.18 லட்சம் செலவில் எரிவாய் தகன மேடை வளாகத்துக்கு தடுப்புச் சுவா், நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணியை நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், நகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com