விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

Published on

அரசு மருத்துவா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம்பூா் வருவாய் துறை கிராம சாவடி எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஆம்பூா் தொகுதி மாவட்ட செயலாளா் சி. ஓம்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா்கள் அ. யுவராஜ், மு. நாகப்பன், ஒன்றிய செயலாளா்கள் த. சரவணன், ஆ. சாம், சி. சந்தா், அ. விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் நகர செயலாளா் ரா. சக்தி வரவேற்றாா்.

மாநில செயலாளா் சிவ. செல்லபாண்டியன், மண்டல செயலாளா் சே. சந்திரன் ஆகியோா் சிறப்புஅழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா். மண்டல துணைச் செயலாளா்கள் கோவேந்தன், நவுசத், ம. தமிழ்செல்வன், ஏ. பிரேம்குமாா், ச. ஹரி, லோ. மதன்குமாா், பா. மருதுபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com