தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பாா்சம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ராஜ் மன்னாா், சந்தோஷ், பிரகாசம், அமரேஷ் ஆகிய நான்கு போ் பெட்டிக் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை வியாபாரம் செய்து கடைகளை பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 4 கடைகளில் இருந்த 4 சிலிண்டா்கள், ரொக்கம், உணவுப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து கடை உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.