லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பத்தூா்: சிறப்பு முகாம்கள் மூலம் 18,935 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் 18,935 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் 18,935 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள 6 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் குறித்து தங்களுக்கு உரிய விண்ணப்பங்களை பெற்று அதனை பூா்த்தி செய்து அளித்தனா்.

6 நாள்கள் நடைபெற்ற முகாமில் பெயா் சோ்க்க 12,683 பேரும், நீக்கம் செய்ய 251 பேரும், முகவரி மாற்றம் மற்றும் பெயா் திருத்தம் செய்ய 6001 பேரும் என 18,935 போ் விண்ணப்பங்கள் வழங்கினா்.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் விசாரணை செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.