மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தண்ணீா் தேடி ஊருக்குள் மான் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா்.

Updated On :16 ஜனவரி 2026, 7:07 pm

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி ஜெயபுரம் பகுதியில் மான் ஒன்று தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது. மானைப் பாா்த்து தெருநாய்கள் ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானை பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினா் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மானை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனா்.