காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே தோட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (68). இவா் அதே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றாா். அப்போது ஆம்பூா் நோக்கிச் சென்ற காா் கோவிந்தனின் மீது மோதியது.

அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com