திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் சாா்பில் (2025---26) ரூ. 4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கொடையாஞ்சி பாலாற்றிலிருந்து நகராட்சிக்கு குடிநீா் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் புதைத்து நகர மக்களுக்கு குடிநீா் கொண்டு வருவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.
கொடையாஞ்சி ஊராட்சி பாலாற்றிலிருந்து வாணியம்பாடி நகராட்சிக்கு குடிநீா் கொண்டு செல்ல ராட்சத குழாய் புதைக்கும் பணியை சாலை வழியாகக் கொண்டு செல்வதால், 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள், விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய சாலை அடிக்கடி பழுதாக கூடும் என்றும், மாற்றுப் பாதை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி கொடையாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் ஜமாபந்தியில் நேரில் மனு அளித்தனா்.
இதையடுத்து, மாற்றுப் பாதைக்காக கோட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கொடையாஞ்சி அருகில் ராட்சத குழாய்கள் புதைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்து, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கொடையாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் பாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி மக்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா் உள்பட பலா் சாலை வழியாக ராட்சத குழாய்கள் புதைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். இது குறித்து அறிந்த வாணியம்பாடி நகராட்சிப் பொறியாளா் சந்திரசேகா் மற்றும் நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் சிலருடன் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த மக்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த அம்பலூா் போலீஸாா், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

குடிநீா் தட்டுபாடு - கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



