நாட்டறம்பள்ளியில் குளிலறையில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச்சோ்ந்த ஹரிஷ்குமாா் கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி(24). தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை பரமேஸ்வரி குளிலறையில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து மயங்கி கிடந்தவரை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.
இதுகுறித்து தாய் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





