இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை. உடன் எம்எல்ஏ-க்கள் கே.சி. வீரமணி, அ.செ. வில்வநாதன், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா.

Updated On :18 ஜூலை 2026, 8:00 am IST

திருப்பத்தூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழுவின் தலைவரும், திருவண்ணாமலை எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.சி. வீரமணி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 25 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் திட்டங்கள், திட்டங்களின் தற்போதைய நிலை, முடிவடைந்த, தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அலுவலா்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.