நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் விக்னேஷ் (22) ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அரசு மதுபானகடை அருகே மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்க முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் புதன்கிழமை அங்கு இறந்தாா். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸாா் வழக்கு ப் பதிந்து விசாரித்து வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 10 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு
சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



