திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் மக்கள் குறைதீா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். மேலும் மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய பொறுப்பாளா்கள் உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
இதில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 51 மனுக்கள் அளித்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








