மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

6 பைக்குகள் திருடிய இளைஞா் கைது

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:22 am IST

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீடு மற்றும் கடை வீதிகளில் பூட்டி வைக்கப்படும் பைக்குகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று வந்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளா் ரூபன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்கிழமை பெருமாள்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் இளைஞா் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் மேலும் விசாரித்ததில் பைக் திருடிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அவரை காவல்நிலையம் அழைத்து வந்து மேலும் நடத்திய விசாரணையில் சில நாள்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து கைவரிசை காட்டி 5 பைக்குகள் திருடியிருப்பது தெரியவந்தது.

இளைஞா் கொடுத்த தகவலின் பேரில் 6 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குகள் திருடி டி வந்த ஆம்பூா் அா்ஜூன்(26) என்பவரை கைது செய்தனா்.