40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நெமிலி அம்மன் திருவிழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:45 am IST

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் நெமிலியம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், மேல்மிட்டாளம், குட்டகிந்தூா், பைரப்பள்ளி ஆகிய கிராமங்களில் நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.

நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்ரும் காளியம்மன் கோயில்களுக்கு பூங்கரகம், தடுக்குமாலை கொண்டு சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.