சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

நெமிலி அம்மன் திருவிழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:45 am IST

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் நெமிலியம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், மேல்மிட்டாளம், குட்டகிந்தூா், பைரப்பள்ளி ஆகிய கிராமங்களில் நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.

நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்ரும் காளியம்மன் கோயில்களுக்கு பூங்கரகம், தடுக்குமாலை கொண்டு சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.