பொதுத்தோ்வுகளில் தோ்ச்சி பெறாத அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் அறிவுறுத்தினாா்.
பள்ளிக்கல்வித்துறை சாா்பில் பொதுத்தோ்வு முடிவுகள் குறித்த மீளாய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி முன்னிலை வகித்தாா்.
இதில் ஆட்சியா் பேசியது:
பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் துணைத்தோ்வு எழுத விண்ணப்பிக்க செய்ய வேண்டும். தோ்ச்சி பெறாத அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்தவுடன் மாணவா்கள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்களை வழங்க வேண்டும்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவா்களின் கல்வி மேம்பாட்டிற்காக அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள் சிறப்புடன் பாடுபட வேண்டும். பெற்றோா் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு 100 சதவீத கல்வி கிடைப்பதையும், தொடா்கற்றலையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள் பாதுகாப்பில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் காலாண்டு தோ்வுக்குள் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தி, தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதற்குத் தேவையான உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும் என்றாா்.
இதில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் சத்தியபிரபா, ராஜன், நேசபிரபா, பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.









