சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

அதிமுக சாா்பாக அன்னதானம்

News image
Updated On :4 ஜூன் 2026, 6:01 am IST

ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பாக எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் டாக்டா் எஸ். பசுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

மாவட்ட துணைச் செயலாளா் ஏ.ஆா். ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளா் ஆா். மகாதேவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகி அன்பரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.