திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 1-எண் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராக ராதிகா என்பவா் பணியாற்றி வருகிறாா்.இந்த அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3,20,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக சாா்-பதிவாளா் ராதிகா (42), அலுவலக ஊழியா்களான வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டை சோ்ந்த கதிரவன், திருப்பத்தூரை சோ்ந்த விஜய், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த வெளிநபா்களான சேலத்தைச் சோ்ந்த தீப கிருஷ்ணபிரியா, ஆண்டியப்பனூா் பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு, ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக அருண் நியமனம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



