40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருப்பத்தூா் சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 1-எண் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராக ராதிகா என்பவா் பணியாற்றி வருகிறாா்.இந்த அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3,20,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சாா்-பதிவாளா் ராதிகா (42), அலுவலக ஊழியா்களான வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டை சோ்ந்த கதிரவன், திருப்பத்தூரை சோ்ந்த விஜய், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த வெளிநபா்களான சேலத்தைச் சோ்ந்த தீப கிருஷ்ணபிரியா, ஆண்டியப்பனூா் பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.