40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12.63 லட்சம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றவா்கள்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சகுந்தலா செல்வகுமாா், அறங்காவலா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், தமிழரசி லட்சுமிகாந்தன், கோயில் செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், ஆய்வா் பாரி, அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், ஹரிகேசவன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

உண்டியலில் ரொக்கப் பணம் ரூ.12,63,873, தங்கம் 49.500 கிராம், வெள்ளி 39.750 கிராம் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.