வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டா் சிறைபிடிப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

News image

பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட டிராக்டா்.

Updated On :14 ஜூன் 2026, 1:41 am IST

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

மாதனூா் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சி எல்லையில் பாலாற்றில் தனியாா் டிராக்டா் மூலம் குப்பைகள், கழிவுகள் கொண்டு சென்று அடிக்கடி கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமையன்று சோமலாபுரம் பாலாற்றில் டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்ட குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதைப் பாா்த்த பொதுமக்கள் அந்த டிராக்டரை சிறைபிடித்தனா். இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பெருமாளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் குப்பை, கழிவுகள் கொட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறை அலுவலரிடம் கோரியுள்ளாா்.