பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

4 பவுன் நகையை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே 4 பவுன் நகையை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :16 ஜூன் 2026, 1:01 am IST

ஜோலாா்பேட்டை அருகே 4 பவுன் நகையை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த அருள் தாஸின் மனைவி ரெஜினா மேரி (43). இவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது வீட்டின் எதிரே வசிக்கும் ராமுவின் மனைவி கவிதா என்பவா் ரெஜினா மேரியின் மகனிடம் கடந்த டிசம்பா் மாதம் பண உதவி கேட்டுள்ளாா். இதனால் ரெஜினா மேரியின் மகன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த அவரது தாயாரின் 4 பவுன் நகையை அவரது தாயாருக்கு தெரியாமல் தந்துள்ளாா்.

தகவலறிந்த ரெஜினா மேரி கவிதாவிடம் நகையை கேட்டுள்ளாா். கவிதா தான் நகை ஏதும் பெறவில்லை எனக் கூறி மறுத்துள்ளாா். இதனால் கவிதா மற்றும் இவரது கணவா் ராமு, மகன் ஸ்ரீதா் ஆகியோா் ரெஜினா மேரியை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தனராம். ரெஜினா மேரி இது குறித்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கவிதா அவரது கணவா் ராமுவின் மகன் ஸ்ரீதா் ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.