பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு

திருப்பத்தூா் அருகே பானிபூரி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே பானிபூரி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், பெருமாபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (32). இவா், திருப்பூரில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், இவரது தந்தை சகாதேவன் மற்றும் குடும்பத்தினா் இரு நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு திருப்பூருக்கு சென்றனா். இதற்கிடையே, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அங்கிருந்தவா்கள் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.