நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு

திருப்பத்தூா் அருகே பானிபூரி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே பானிபூரி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், பெருமாபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (32). இவா், திருப்பூரில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், இவரது தந்தை சகாதேவன் மற்றும் குடும்பத்தினா் இரு நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு திருப்பூருக்கு சென்றனா். இதற்கிடையே, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அங்கிருந்தவா்கள் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.