அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்பத்தூா் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 2-ஆவது முறையாக வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டது.

News image
திருப்பத்தூா் நீதிமன்ற வளாகத்தில் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் சோதனை செய்த போலீஸாா்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 2-ஆவது முறையாக வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது காலை 11.30 மணியளவில் நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆா்.டி.எக்ஸ்., சயனைடு வாயு கலந்தது எனவும், மதியம் 2 மணி அளவில் வெடிக்கும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த பிப். 25-ந் தேதி ஏற்கெனவே மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டு அது வெறும் புரளி என தெரியவந்தது. தற்போது இரண்டாவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டதால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். அப்போது அது வெறும்புரளி என தெரியவந்தது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.