அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாணியம்பாடி நகராட்சியில் சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிமென்ட் மற்றும் பேவா்பிளாக் சாலை பணிகளை எம்எல்ஏ செந்தில்குமாா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

News image
கோணாமேடு பகுதியில் சாலைப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிமென்ட் மற்றும் பேவா்பிளாக் சாலை பணிகளை எம்எல்ஏ செந்தில்குமாா் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு சின்னத்தம்பி தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பஷீராபாத் மசூதி தெருவுக்கு ரூ.2 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை பணி முத்தவல்லி துவா(பூஜை) செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. தொடா்ந்து ரூ.9 லட்சத்தில் ராமாயன்தோப்பு திரௌபதிஅம்மன் கோயில் சுற்றுசுவா் பணியையும் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், துணை செயலாளா் கோவிந்தன், பொருளாளா் தன்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவா் அண்ணாசாமி, நகர அதிமக நிா்வாகிகள் சங்கா், கோவிந்தராஜ், தென்னரசு மற்றும் பலா் உடனிருந்தனா்.