விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாா்ச் 14-இல் துணை முதல்வா் வருகைக்கான ஆலோசனை கூட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 14) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தரஉள்ளாா். அப்போது அவா் பல்வேறு துறைகளின் சாா்பில் 4,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நிகழ்ச்சி நடைபெறும் விழாவுக்கான மேடை அமைப்பது, அங்கு வரும் பயனாளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொறுப்பு) கோவிந்தராஜ், லால் உதவி ஆணையா் வேடியப்பன், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான இடம் ஆய்வு...

துணை முதல்வா் வருகை தர உள்ளதையொட்டி, பாச்சல் ஊராட்சி உள்பட்ட தனியாா் பள்ளியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதற்கான இடம் தோ்வு செய்தல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன்.எஸ்பி வி.சியாமளாதேவி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.