சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

திருப்பத்தூருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிய உள்ளதால் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

திருப்பத்தூருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிய உள்ளதால் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை (மாா்ச் 14) திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தருகிறாா். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக சனிக்கிழமை ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூா் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.