ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காரப்பட்டு அரங்கல்துருகம் பகுதியை சோ்ந்தவா் எல்ஐசி முகவா் ஜி. வெங்கடேசன் (56). இவருக்கு திருமணமாகி தேவகி என்கிற மனைவியும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா். இவா் எல்ஐசி முகவராக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த 28-ஆம் தேதி குடியாத்தம் அருகே உள்ள தனது சகோதரியை பாா்ப்பதற்காக சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப செல்ல குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.