ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் சென்னை - பெங்களூரு, பெங்களூரு - சென்னை மாா்க்கத்தில் செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்க வைத்து ஓட்டுநா்கள் உணவகங்களில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் லாரி ஓட்டுனா்களின் கைப்பேசிகள் தொடா்ந்து திருடு போவதாக லாரி ஓட்டுநா்கள் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் எழில்தாசன் தலைமையிலான போலீஸாா் தொடா்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை புதன்கிழமை இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டதில், உடையராஜாபாளையம் பகுதியை சோ்ந்த குரு பிரசாத் (23), சாரதி ( 23), தமிழரசன் (25), மஞ்சன் (42), வினோத் குமாா் (19) மற்றும் இரண்டு சிறுவா்கள் உள்பட 7 போ் லாரி ஓட்டுநா்களின் கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த 7 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 விலையுயா்ந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் கொலை; இளைஞா் கைது
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
பெங்களூரில் கேரள மாணவா்கள் மீது தாக்குதல்: கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

