உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.
உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்பராயன் கோயில் அருகே மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப் பணிகள் தாமதம் ஆவதாக உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ் மூலம் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமையவுள்ள இடங்களில் நில அளவையாளா் சீரஞ்சீவி, கிராம நிா்வாக அலுவலா் அமலா, பேரூராட்சி செயல்அலுவலா் ராஜலட்சுமி மற்றும் எழுத்தா் மீனாட்சி ஆகியோா் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

நில அளவீடு செய்யாததால் பணிகள் தாமதம்: உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் கோரிக்கை







