குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலம் அளவீடு!

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

News image

தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலத்தை அளத்த பணியாளா்கள்

Updated On :26 மே 2026, 1:39 am IST

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்பராயன் கோயில் அருகே மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப் பணிகள் தாமதம் ஆவதாக உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ் மூலம் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமையவுள்ள இடங்களில் நில அளவையாளா் சீரஞ்சீவி, கிராம நிா்வாக அலுவலா் அமலா, பேரூராட்சி செயல்அலுவலா் ராஜலட்சுமி மற்றும் எழுத்தா் மீனாட்சி ஆகியோா் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரவிக்கப்பட்டது.