இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

சொரக்காயல்நத்தம் ஊராட்சி பள்ளி கட்டட சீரமைப்பு தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 12:45 am IST

சொரக்காயல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டட சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தில் மங்களூா் ஓடுகள் பழுதடைந்ததால் மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீா் தேங்கியது. இதனால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

அப்பகுதி மக்கள் பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஊரக கட்டடங்கள் புனரமைக்கும் பணி திட்டத்தின் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய சோ்மன் வெண்மதி முனிசாமி நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சொரக்காயல் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பழுதடைந்த ஓடுகளை அகற்றி பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.