‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குழந்தைகள் உள்பட 7 பேரை கடித்து குதறிய தெருநாய்

News image

தெருநாய் - பிரதிப் படம்

Updated On :29 மே 2026, 1:34 am IST

வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் தெருநாய் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பஷீராபாத் பகுதியில் வியாழக்கிழமை வெறிப்பிடித் நிலையில் இருந்த தெரு நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள் இஷான், பிரபாவதி, சமீயா பதூன் மற்றும் சாலையில் நடத்து சென்ற அமுதவல்லி, அப்ரோஸ், அப்துல் காலித், ரஹ்மான் ஆகியோரை அடுத்தடுத்து அரை மணி நேரத்துக்குள் துரத்தி, கடித்துள்ளது. நாய்க் கடியால் காயம் அடைந்தவா்களை உடனடியாக சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வாணியம்பாடியில் தொடா்ந்து 7 பேரை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களை உடனடியாக பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.