ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தகவல் தொடுதிரை இயந்திரங்கள் கோரி ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மீண்டும் தகவல் தொடுதிரை இயந்திரங்களை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :13 மே 2013, 12:30 am IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மீண்டும் தகவல் தொடுதிரை இயந்திரங்களை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பா.ஜ.க. கட்சி பிரமுகர் சுப.செல்வராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு விவரம்:

திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 2007-ம் ஆண்டு தகவல் தொடுதிரை இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

இந்த இயந்திரங்களில் இரண்டு ரூபாய் நாணயத்தை  போட்டுவிட்டு அந்தந்த வட்டங்களுக்கு உள்பட்ட விவசாய நிலங்கள், பட்டா உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இதனால் கிராம மக்கள் அதிக அளவில் பயனடைந்து வந்தனர். மேலும் நிலம் தொடர்பான முறைகேடுகளும் குறைந்தன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, வட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் தொடுதிரை இயந்திரங்கள் காணப்படவில்லை.

இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மீண்டும் தகவல் தொடுதிரை இயந்திரங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.