முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ரூ.25 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் தாதன்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம்  ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.  

Updated On :18 ஏப்ரல் 2018, 8:02 am IST

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் தாதன்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம்  ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.  
தாதன்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான புதிய தண்ணீர்க் கால்வாய் எனப்படும் நன்நீர் குளம் உள்ளது. இந்தக் குளத்தை ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்து குளத்தை அடைத்து 50க்கும் மேற்பட்ட மெக்கானிக் ஷெட்கள், குடியிருப்புகள், சிறிய நிறுவனங்கள் என வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தனர். 
நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வரும் இந்தக் குளத்தை மீட்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு முயற்சி எடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை. 
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்  உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர். 
இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் வருவாய்த் துறையினர், சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் போலீஸார், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு வந்தனர். அங்கு, ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன்பு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் யாராவது தங்கியுள்ளனரா, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா? என்று போலீஸார் உறுதிப்படுத்திக்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளந்து கல் போட்டுக் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இப்பணி மதியம் முடிவுக்கு வந்தது. அதன் பின், மீட்கப்பட்ட இடத்தை சென்னை குடிநீர் வாரியம் கையகப்படுத்தியது. 
தொடர்ந்து, "இந்த இடம் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் சொந்தமானது' என்ற வாசகம் அடங்கிய பலகையை அங்கு ஊழியர்கள் நட்டனர். 
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.