டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு நகர இளைஞர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவரது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதில், திருத்தணி நகர இளைஞர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








