டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் உறுப்பினராக சேர்ப்பு

பொன்னேரி வட்டம், மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் புதிய உறுப்பினர்களாக வியாழக்கிழமை சேர்க்கப்பட்டனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 9:54 pm

DIN

பொன்னேரி வட்டம், மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் புதிய உறுப்பினர்களாக வியாழக்கிழமை சேர்க்கப்பட்டனர். 
மெதூர் கிராமத்தில், திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் ஊர்ப்புற நூலகம் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களை நூலக உறுப்பினராக்க மாவட்ட நூலகத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
அதன் பேரில் பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 107 பேர் மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை பாக்கம் சித்த மருத்துவர் தமிழன் வழங்கினார். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகணேசன், பொன்னேரி கிளை நூலகர் சம்பத், மெதூர் ஊர்ப்புற நுலகர் தியாராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.