மாநில அளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வெற்ற டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நேஷனல் ஆல் ஸ்டைல் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குங்பூ, யோகா உள்ளிட்ட தற்காப்புக் கலை போட்டிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், குங்பூ ஷாய் பிரிவில்
டி.ஜே.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் 3-ஆம் வகுப்பு மாணவர் காமேஷ், 5-ஆம் வகுப்பு மாணவர் சுகன் ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர்.
அதேபோல குங்பூ கட்டாவ் பிரிவில் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் 1-ஆம் வகுப்பு மாணவர் அன்புசெழியன், 3-ஆம் வகுப்பு மாணவர் காமேஷ், 5-ஆம் வகுப்பு மாணவர் சுகன் ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர். மேலும் 3-ஆம் வகுப்பு மாணவி விஷாலி யோகாவில் முதல் பரிசை வென்றார்.
மேலும், இப்போட்டிகளில் 7 மாணவர்கள் இரண்டாம் பரிசையும், 7 மாணவர்கள் 3-ஆம் பரிசையும் வென்றனர். அதிக பதக்கங்களை வென்றதன் அடிப்படையில் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான கோப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதன்கிழமை டி.ஜே.எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார். நிகழ்ச்சிகளில், போட்டிகளில் வென்ற மாணவர்களை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பாராட்டி பரிசளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






