திருப்பத்தூர் வணிகவரி அலுவலகத்தில், உதவி ஆணையரின் கீழ் 13 ஊழியர்களும், செயலாக்கப் பிரிவில் 5 அதிகாரிகளும் பணிபுரிந்து வரும் நிலையில், புதிய கட்டடத்தில் வணிக வரி ஊழியர்களின் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான இடமும் இல்லை. மேலும், சுற்றுச்சுவரும் இல்லை.
புதிய கட்டடம் கட்டி முடித்ததும், அங்கு வணிகவரித்துறை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கட்டடம் தொடர்ந்து பூட்டப்பட்டுள்ளதால், இந்த அலுவலகத்தின் முன்புறம் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.