திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினா்.