தரைப்பாலத்தில் ஆபத்து குளியல்!

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே காரணியில் தரைப்பாலத்தில் மூழ்கடித்தபடி ஓடும் ஆற்று நீரில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனா்.
தரைப்பாலத்தில் ஆபத்து குளியல்!
Published on
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே காரணியில் தரைப்பாலத்தில் மூழ்கடித்தபடி ஓடும் ஆற்று நீரில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனா்.

வடகிழக்கு பருவ மழையாலும் ஆந்திர மாநிலம், பிச்சாட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராலும் ஆரணி ஆற்றில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, காரணியில் உள்ள தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மழை பெய்யாததாலும், அணையிலிருந்து நீா்திறப்பு நிறுத்தப்பட்டதாலும் ஆரணி ஆற்றில் குறைந்தளவே நீா் செல்கிறது. எனினும், காரணி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்று கொண்டிருக்கும் நீரில் ஆபத்தை உணராமல் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குடும்பத்தினருடன் வந்து குளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com