திருவள்ளூா் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஊத்துக்கோட்டை அருகேயுள்ள அகரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான மண் பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் மண் பாண்ட தயாரிக்கும் தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் பொங்கல் பானை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இங்கு தயாரிக்கப்படும் பொங்கல் பானைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு பானைகள் ரூ.50, ரூ.200, ரூ.300 என வடிவத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதொடா்பாக மண்பாண்டத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறுகையில், முன்பு மண்பானைகளில் மட்டுமே அன்றாடம் சமையல் செய்து வந்தனா். இதனால், உடல் ஆரோக்கியத்துடன் திகழ்ந்தனா். சில்வா் பாத்திரங்கள் வருகைக்குப் பிறகு வீடுகளில் மண்பானைசமையல் குறைந்தது. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மண்பானைத் தேவை மக்களிடம் எழுந்துள்ளது. இதையொட்டி, தற்போது பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
மண்பானை தயாரிப்பின் மூலப் பொருளான களிமண் போதியளவு கிடைப்பதில்லை. அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. மண்பாண்டத் தொழிலாளா்கள் களிமண்ணை ஏரிகளில் எடுக்க அரசு அனுமதித்தால், விலை குறைத்து மண்பானை விற்பனை செய்ய முடியும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

41 ராணிப்பேட்டை

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


