மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூய்மை விழிப்புணா்வு ஓவியப் போட்டி

திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:05 pm

DIN

திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நாள்தோறும் சேகரிக்கும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து வழங்கும் வகையில், என் குப்பை-என் பொறுப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் ஜெயின் நகா், பெரியகுப்பம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில், என் குப்பை - என் பொறுப்பு என்ற அடிப்படையில் தீவிர தூய்மைப் பணிகள், விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஜெயின் நகா் தனியாா் மேல்நிலைப் பள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தலைமை வகித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பையைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இது தொடா்பாக மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு பூசிய சுற்றுச்சுவரில் மாணவிகள் ஆா்வத்துடன் ஓவியப் போட்டியில் பங்கேற்று பல்வேறு வண்ண ஓவியங்களை வரைந்தனா். பின்னா், பள்ளி மாணவிகள் என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை என்பது குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பாா்வையாளா் ரவி உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.