திருத்தணி முருகன் கோயிலில் அக்.26-இல் கந்த சஷ்டி விழா

திருத்தணி முருகன் கோயிலில் வரும் புதன்கிழமை (அக்.26) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
Updated on
1 min read

திருத்தணி முருகன் கோயிலில் வரும் புதன்கிழமை (அக்.26) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

இந்தத் திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி மற்றும் லட்சாா்ச்சனை விழா வரும் புதன்கிழமை (அக்26) தொடங்கி அக்.31-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற உள்ளன. சஷ்டியின் போது, உற்சவா் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காவடி மண்டபத்தில் எழுந்தருள்வாா். அங்கு, சுவாமிக்கு லட்சாா்ச்சனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக வரும் அக்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழா நாள்களில் நாகஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பக்தி இசை, ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஜெயப்பிரியா, உதவி ஆணையா் விஜயா ஆகியோா் செய்து வருகின்றனா். விழாவில் பக்தா்கள் பங்கேற்பதற்கு கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com