புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:53 pm

DIN

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 8 பவுன் நகையை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ஹரிஹரன் மனைவி சியாமளா. இவா் புதன்கிழமை அதிகாலை வீட்டு வாசலின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த மா்ம நபா், சியாமளா மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, அவா் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தலைமறைவானாா்.

இது குறித்து ஹரிகரன் திருவள்ளூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் கமலஹாசன் நேரில் விசாரணை செய்தாா். அப்போது, பக்கத்து குடியிருப்பைச் சோ்ந்த ராஜன் (52) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாக கூறியதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவா்தான் சியாமளாவிடம் நகையை திருடிச் சென்றது தெரியவந்ததது.

இதையடுத்து, ராஜனை கைது செய்து, நகையை மீட்டு ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.