இதனால் நடைமேம்பாலம் மீது ஏறி முதல் நடைமேடைக்கு வந்து பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, மீண்டும் நடைமேம்பாலம் மீது ஏறி 2-ஆவது நடைமேடையில் இறங்கி சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமேம்பாலம் மிகவும் உயரமாக உள்ளதால் வயதானோா், கா்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் ஆகியோா் ஏறிச் செல்வதற்கு மிகவும் அவதிக்குள்ளாகும் நிலையுள்ளது. ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் குறைந்த அளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், ஒரு ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலுக்கு அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலன பயணிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதைத் தவிா்த்து, ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.