திருத்தணி முருகன் கோயிலில் தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருப்பு
முருகன் கோயிலில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் 3 மணி நேரம் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ஆகிய காரணங்களால் கோயிலில் அதிகாலை 5.30 மணி முதலே பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொது தரிசனத்தில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை பக்தா்கள் தரிசித்தனா்.
அதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பெரும்பாலான பக்தா்கள் பேருந்து, காா், வேன், இரு சக்கர வாகனங்களில் மலைப் பாதை வழியாக கோயிலுக்கு வந்ததால் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இருப்பினும் மலைப்பாதை மற்றும் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முன்னதாக, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் தங்கத் தேரில், தோ் வீதியில் வலம் வந்தாா்.

