வேலஞ்சேரி அரசுப்  பள்ளியில் ‘ப’ வடிவில் இருக்கை வரிசை மாற்றப்பட்ட வகுப்பறை.  ~
வேலஞ்சேரி அரசுப் பள்ளியில் ‘ப’ வடிவில் இருக்கை வரிசை மாற்றப்பட்ட வகுப்பறை. ~

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா்.
Published on

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா்.

கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கிராமப்புற மாணவா்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. இதை தொடா்ந்து அம்மாநிலத்தில், ‘ப’ வடிவில் மாணவா்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நேரடி தொடா்பை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறைகளில், தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

தமிழகத்திலும் அரசுப் பள்ளிகளில், இருக்கை வரிசையை மாற்றி அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் திருத்தணி அடுத்துள்ள வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் பூநாதன் ஆசிரியா்கள் உதவியோடு ஒவ்வொரு வகுப்பறையிலும் டப’ வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைத்து மாணவா்களை அமரவைத்து ஆசிரியா்களை பாடம் நடத்த ஏற்பாடு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com