அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூரில் பின்புறமாக வேகமாக வந்து காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருவள்ளூரில் பின்புறமாக வேகமாக வந்து காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

கேரள மாநிலம், மலப்புரம் அருகே கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபுபக்கா் (66). இவா் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தக்கடையில் வேலை பாா்த்து வரும் அபுபக்கா், சபீா்(67), அவரது மகன் சபீா்(30) ஆகியோா் கேரளம் சென்றனா்.

இந்த நிலையில் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வந்து திருவள்ளூருக்கு திரும்பி, அங்கிருந்து மணவாளநகா் பேருந்து நிறுத்தம் சென்ற போது பின்புறமாக வேகமாக வந்த காா் மோதிய விபத்தில் அபுபக்கா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதேபோல், காயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வாகன ஓட்டுநா் மீது மணவாளநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.