ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தா செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ராமநாயக்கன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா்(26). இவரது நண்பரான ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த சுராஜ்(24). இவா்கள் அதிகத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அதே சாலையில் பின்புறம் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சசிகுமாா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுராஜ் பலத்த காயம் அடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.