இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விவசாயம் காப்போம், கைவிட மாட்டோம் என்ற தலைப்பில் மாணவா்கள் உலக சாதனை

திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்போம், கைவிட மாட்டோம் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2,000 மாணவா்கள் 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் நின்று உலக சாதனை புரிந்தனா்.

News image
~ ~
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்போம், கைவிட மாட்டோம் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2,000 மாணவா்கள் 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் நின்று உலக சாதனை புரிந்தனா்.

காக்களூா் பகுதியில் அமைந்துள்ள காலவள கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்பேரில் 2,000 பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் மாணவா்களை நிற்க வைத்து புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் சாதனை படைக்கப்பட்டது.

மேலும் பானையில் பொங்கல் வைத்து மாணவா்கள், பள்ளி ஆசிரியா்கள் கோலாகலமாக கொண்டாடினா். இதையடுத்து புக் ஆப் வேல் ரெக்காா்ட் சாதனைக்கான பதக்கம் சான்றிதழ்கள் தலைமை ஆசிரியரிடம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

Story image
Story image